crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு

பண்டைய காலத்தில் ஆளுகைக்கு அடையாளமாக அரச வாள் ஒரு சின்னமாக திகழ்ந்தது. இவ் வாளானது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் முக்கியமான ஓர் வரலாற்று இடத்தையும் கொண்டுள்ளது.

அது பரம்பரை பரம்பரையாக மாபெரும் போர் வீரர்களால் கைக்கொள்ளப்பட்டு நீதியையும் வெற்றியையும் பிரகடணப்படுத்தப்பட்டது.

ஒரு யுத்த வீரனுடைய மரணத்திற்குப் பின்பு அவர் உபயோகித்த வாளானது இனிமேலும் எவ்வித போர்களுக்கும் பயன்படுத்தப்படாது, அது கனத்துக்குறிய கருவியாக மாறுகின்றது. பண்டையகாலங்களில் ஒரு யுத்த வீரனை ஏற்படுத்துவதும், அவ் வீரனுடைய பதவி பிரமாணத்திற்கும் அவ் வாளானது பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, இவ்வாறான சம்பிரதாய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ஒரு வாளானது காலாகாலமாக மதிப்போடும் கனத்தோடும் பயன்படுத்தவேண்டிய ஒன்றாகும்.

வீரமாகாளி அம்மன் கோவிலானது யாழ்ப்பாண வட்டாரத்தில் பிரசித்திபெற்ற கோவிலாகும். ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்கள் போர்களுக்கு போகமுன், அக் கோவிலில் அவர்கள் வாளை விரமாகாளி அம்மன் சந்நிதி முன் வைத்து அவர்களுக்காக விஷேட பூஜை செய்யப்பட்டது.

யாழ்ப்பாண அரசர்களான ஆரிய சக்கரவத்திகளின் அரச வாள்களில் ஒன்றான வாளானது வீரமாகாளி அம்மன் கோவிலில் பல வருடங்களாக வைத்து கொள்ளப்பட்டு வந்தது. அவ் வாளானது விலை மதிக்க முடியாத இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. வீரமாகாளி அம்மன் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த அவ் இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த வாளானது 15 வருடங்களுக்கு முன் ஒரு கண்காட்சிக்காக கொண்டுசெல்லப்பட்டு, அது மறுபடியும் அக் கோவிலுக்கு வந்தடையவில்லை. பிற்பதாக அக் கோவில் அவ் வாளைப்போன்று ஒரு மாதிரியைச் செய்து வைத்துள்ளது. அது மூன்றரை அடி அளவு கொண்ட வாளாகும்.

இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த அரச வாள்களில் ஒன்றான அவ் வாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து காணப்படவில்லை. இவையாவும் வாள் கொடுக்கும் தருணம் சாட்சியாயிருந்து அக்காலத்து வீரமாகாளியம்மன் கோவில் தர்மகர்த்தாவினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அரச வால்களுக்கு உரித்தான வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்த வாளை பாதுகாப்பாகவும் கனத்துடனும் பராமரிக்கவேண்டிய கோவில் குருக்கள் அவ் வாளை கொடுத்தது சரியான காரியம் அல்ல. இப்பேற்பட்ட அசதியான காரியங்களால் யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கியமான வரலாற்று ஆவணத்தை இழந்தது மட்டுமல்லாது, நம் பின் சந்ததியார்களுக்கு நம் வரலாற்று சிறப்பினை பாதுகாத்து காண்பிக்கத் தவறிவிட்டோம். இனிவருங்காலங்களில் நம்முடைய வரலாற்று ஆவணங்களை அசதியாய் விட்டுவிடாது அதனை நம் எதிர்கால நோக்கோடு பாதுகாப்போம்

External Links:

http://www.yarlosai.com/?p=25072
http://www.deepamnews.com/வாளைக்-காணவில்லை/

Rajadhani Nilayam
The Netherlands